மனித வாழ்க்கையில் துன்பங்கள் தொடரும் போதும், சோதனைக் காற்றுகளால் வாழ்க்கை அசைக்கப்படும்போதும் ஏன்? ஏன்? என்ற கேள்விகள் ஓடோடி வந்து கொண்டிருக்கும். சில நேரங்களில் அந்த கேள்விகளே பெரிய சுமைகளாக மாறி விடும். அனைத்துத் துன்பங்களுக்கும் காரணங்களைக் கண்டறிவது கடினமே. ஆயினும் தேவக் கிருபையைச் சார்ந்து கொண்டோருக்கு அனைத்து சூழ்நிலைகளிலும் எப்படி இந்த துன்பச் சூழ்நிலைகளைக் கடந்து செல்வது என்ற கேள்விக்கு நிச்சயம் நல்ல விடைகள் உண்டு. துன்பங்கள் ஏன்? ஏன்? என்ற தலைப்பில் ஜீவ நீரோடை மாத இதழில் தொடர்ந்து வந்த கட்டுரைகளால் ஆயிரக்கணக்கானோர் தேவ ஆறுதலையும், நம்பிக்கையும், தைரியத்தையும் கண்டு அடைந்தனர். இந்த நூலில் இடம்பெற்றுள்ள கட்டுரைகளால் அநேகர் தெய்வீக ஆறுதலையும், ஆதரவையும் பெறுவார்கள் என்பது நிச்சயம்.
LANGUAGE | TAMIL |
---|
Only logged in customers who have purchased this product may leave a review.
There are no reviews yet.